Tuesday, July 24, 2012

facebook culture...


காணும் மனிதருக்குள் எத்தனை முகங்கள்...தாங்கள்தான் அதிமேதாவி போல் காட்டிகொள்வதும், மற்றவர்களை முட்டாளாக நினைப்பதும் முக நூலில் நிறைய பார்க்கலாம். அதைவிட கொடுமை, மற்றவர்களை கேலி செய்வதும், ஏளனமாக மற்றவர்களை மன நோக செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இருக்கலாம், அவர்கள் எல்லாம் தெரிந்த அதிமேதாவியாக கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றவர்களை குறை சொல்லும் அவர்களுக்கு உரிமை யார் தந்தார்கள்? தன் கருத்துக்களை மற்றவர்களை மனம் வலிக்க பதிவு செய்வதுதான் இன்பமோ? அவரவர் பிரச்னை அவரவர்களுக்கு,  இனிமை தேடி  இங்கு வந்தால்,   கனத்த இதயத்தோடு போக வேண்டி வருகிறது.

மற்றவர்களை நாம் சந்தோசமாக வைக்க முடியாமல் போனாலும், அட்லீஸ்ட் மனம் வலிக்க பேசுவதை தவிர்க்கலாமே. தன் நிலைமையை யாரும் யோசித்து பார்பதும் இல்லை. மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் பகைத்து கொள்வதும், தூற்றுவதும், தனி நபரை தாக்குவதும் என்னே அழகோ? அதுதான் மனித நேயமோ?

காதல்


காதல்
இதில் விழுபவர்களும் புரிவதில்லை
விழுந்து எழுபவர்களுக்கும்
புரிவதில்லை


திருமண வாழ்க்கை
கையில் விளக்கு
வைத்துக்கொண்டே
போய், 
கிணற்றில் விழுவது....

வயது
முதிர் இளைஞ்சர்களால்
மறைக்கப்படும்
மாத காலண்டர்....


நாணம்
பெண்கள் விடும் பாணம்
வாத்தியார் சொன்னது..


பாவாடை தாவணி
இந்த நூற்றாண்டிலிருந்து
தொலைந்து போன
தமிழ் பெண் அடையாளம்


அரசாங்க திட்டம்
புதியதாய் வரும் அரசுவிற்கு
அது-
தொலைக்க படவேண்டிய சிம் கார்டு



ஆடிமாதம்
அனைத்து வகை
அம்மன்களையும்
செவிடாக்கும்
நவீன கால பக்தி...



செல் போன்
பெண்களுக்காக படைக்கப்பட்ட
மிஸ்டு கால்
இயந்திரம்

Monday, July 23, 2012

விழி மூடி உனை நேசித்தேன்..

தாம்பரம் ரயிலடி
MEPZ நிழல் குடை
ராமானுஜம் கம்ப்யூட்டர் சென்டர்
அடையாறு ஸ்டுடென்ட் செராக்ஸ்

அவளோடு நான் சென்ற இடமெல்லாம்..
காவிய சின்னங்களாய் போயின இன்று....
நான் அவளை தொலைத்தாலும்
கனவில் அவளை தொலைக்க முடியவில்லை..

அவளின் சிணுங்கின சிதறல்கள்..
என் தோளில் உராய்ந்த அவளது கேசம்..
நிலை கொள்ளாமல் அலைபாயும்  விழிகள்...
எனை தேடும் தொலைதூர நேசம்....

பொருள்  தேடி நான் பயணித்தேன்..
விழி மூடி உனை நேசித்தேன்..
நான் வரும்வரை காத்திருப்பேன்
என்றாய் பெண்ணே -

















வந்தேன், தேடி அலைந்தேன் ... 
நான் அவளை தொலைத்தாலும்,
கனவில் -
அவளை தொலைக்க முடியவில்லை..