Thursday, April 29, 2021

"சில்லென்ற சில்லென்ற காற்றிலே"

 

இங்கே எனது பாடல் ரெவ்யூ.

இசை ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், மிகத் திறமையான இளம் இசைக் கலைஞர்களும் இருக்கவே இருக்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில், அவர்களின் இசையும், நம்மை பாதிப்படைய செய்கிறது‌. ஆச்சர்யம். இவர்கள், எதோ ஒரு சின்ன புள்ளிகளில், நம்மோடு இணைகிறார்கள். அது, பெரும்பாலும் அது காதல் வயப்பட்ட நினைவுகளாகக் கூட இருக்கலாம்.
காதல் இசைக்கு மயங்காதவர் யாரும் உண்டே!
ரம்ஜான் பண்டிகையின் போது, ஏதோ ஒரு பெரிய முஸ்லிம் பணக்காரரின் வீட்டில் நடப்பது போல் இந்த பாடல் வரும். ரிச்சான பாடல் தளம், மிகவும் அழகான முஸ்லிம் பெண்கள்.
பாடலும் கூட இஸ்லாமிய பாணியிலே, ஜிப்ரான், மிக அழகாய் அமைந்திருப்பார். அழகான ஹம்மிங் ஆரம்பிக்கும். ஆரம்பமே களைக்கட்டும். முஸ்லிம் ப்ரேயரோடு ஆரம்பித்து, நம்மையும் காட்சிகளோடு இன்வால்வ் செய்து விடுவார்கள். அதுவும் சுஃபியில் சில வரிகளை எடுத்திருப்பார்களோ!
ஜோத்தா அக்பரில் வரும் க்வாஜா மேரே க்வாஜா சுஃபி பாடல்கள் போன்று பெர்ஷியன் பாணி‌ இதிலும். இஸ்லாமிய கலாச்சார வடிவங்களில் ஒன்றான சுஃபி இசையினை லேசாக நுழைத்தது வாவ் ரகம்.
"க்யாஹ் க்ரேஹ் மேரே மௌவ்லா
சுக்ரியாஹே தேஹ்ரா..."
"க்யாஹ் க்ரேஹ் மேரே மௌவ்லா
சுக்ரியாஹே தேஹ்ரா..."
மெலிதான இசைக்கோர்வை இசை. நிறைய இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் இல்லையென எனலாம். பேக்ரவுண்டில் கூட, ஸ்ருதியைக் கூட்டவே, முஸ்லிம் ட்ரெடிஷனலைக் கூட்ட, ரிதமிக்கான ஃபைபர்ஸ்கின் tambourine ஒலிகள். கோரஸாக உருது வார்த்தைகளைப் பாடியிருப்பார்கள். ஆண்குரல்களைப் பொருத்தவரையில், சுந்தர்ராவ், முன்னா சௌகத் அலியோடு ஜிப்ரானும் சேர்ந்துக் கொள்கிறார். மூவரில் ஒரு ஆண்குரல், ஸோலாவாகப் பாடும் போது, அபாயகரமான ஹை- பிட்ச்க்கு போனாலும், திரும்பவும் ஸ்ருதியில் வந்து, பர்ஃபெக்ட்டா synchronize ஆகிறது.
அட்டகாசம் என தோணினாலும், there is some discomfort while he tried to sing this with high pitch notes, it seems; anyway, it's been beautifully crafted....
ஆண் குரலில் பாடியிருப்பவர், ஜெய்யே பாடியிருப்பது போலவே இருக்கும். Perfect voice matching.
"சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே..
மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே..."
பெண் குரலில், கௌசிஷிகி சக்ரபர்ட்டி, பெங்காலி, ஹிந்துஸ்தானி பாடுவதில் சமர்த்தர். தமிழ் வார்த்தைகளை அட்க்ஷர சுத்தமாய் பாடியுள்ளார். அதியசமே. இவரின் குரல், ஹேபா பட்டேலின் காஸ்ட்யூமை விட, பாடலின் அழகை இன்னும் மெருகேற்றுவது போல இருக்கிறது.
"கர்தேஷி துனியா...
சுற்றிடும் உலகமும்
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா.."
என்னவொரு குரல்! அருண் ஐஸ்கிரீமின் டபுள் ஃபேளவர் ரொம்பவே பிரசித்தம். அதுவும் கொஞ்சம் மெல்ட்டான இட்டாலியன் டிலைட்ஸ் வித் வெனிலா ப்ளாசம் சாப்பிடும் போது, தொண்டையில் வழுக்கிக்கொண்டு போறதே தெரியாது. அது போன்ற ஐஸ்கிரீம் வாய்ஸ்.
நான் டைரக்டராக இருந்திருந்தால், இந்த முஸ்லிம் பெண்ணையே ஜெய்யைக் காதலிக்க வைத்திருப்பேன்.
வித்தியாசமான காதல் கதை. கதைப்படி, ஜெய்யும் நஸ்ரியாவும் ஐயங்கார் ஆத்துப் பிள்ளைகள். கோவை போகும் ட்ரெயனில் சந்திக்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையால் இரண்டு பேருமே முஸ்லிமாக மாறி, ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள்.
டைரக்டர், சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக, அவர்களின் காதலை சொல்லியிருப்பார்.
ஒரு காலக்கட்டத்தில், இனிமையான காதலை இருவரும் உணர்கிறார்கள்.
"சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன்
தேடி அலைந்தேன்..."
வாழ்க்கையில், காதல் வயப்படுவது என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அட்டாகாசமான, மனம் சார்ந்த கெமிஸ்ட்ரி விளையாட்டுகள்.
அந்த உன்னதமான தருணங்களில், ஆஹா, இந்த பிரபஞ்சமே முழுவதுமே மிகவும் அழகாய் தெரியக் கூடும்.❤️❤️❤️.
"வானில் உதிர்ந்த இறகொன்று
காற்றின் கன்னங்களில்
கவிதை எழுதியதே..."
காதல் உணர்வுகளே அழகு இல்லையா!!!!
பொதுவாக, காதல் பல நிலைகளில் ட்ராவல் ஆகும். இந்த இனிமையான காதல், ப்யார், லவ் - இது கன்ஃபார்ம் ஆவதற்குள், அதுவும் அவளைப் பார்க்கும் போதெல்லாம்; நமக்குள் சில பரவசங்கள் உண்டு பண்ணுவே செய்யும். It's a terrific algorithm which never make us to understand in our life ❤️❤️❤️❤️
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா, அன்பே !!!
நிஜமான காதல் வயப்பட்டவர்கள், இது மாதிரியான பாட்டோ, ஸீனோ பார்க்கும் போது, இதயத்தினுள் சின்ன சின்ன அதிர்வுவலைளை ஏற்படுத்த தவறுவதே இல்லை. இதில் ஜெய்யும் நஸ்ரியாவும் உணர்கிறார்கள்.
இங்கே வருவோம். ஸோ, ஜெய்யும் நஸ்ரியாவை - முஸ்லிம் பெண்ணாக நினைத்துக் கொண்டு இருப்பதால், இம்ப்ரெஸ் செய்ய இஸ்லாமிய கோட்பாடுகளை கற்றுக் கொள்ள, ஒரு முஸ்லிம் பெரியவரிடம் செல்கிறார். அவர் வீட்டில் ஒரு அழகான முஸ்லிம் பெண் வேறு இருக்கிறாள். இங்கே தான் ஹேபா பட்டேல், இந்த முக்கோண கதையில் நுழைகிறார்.
இந்தப் பெண்ணும், ஜெய்யை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விஜய ராகவாச்சாரி என்கிற ஜெய்யோ, ஆயிஷா என்கிற நஸ்ரியாவை அதி தீவிரமாக காதலிக்க தொடங்கி விட்டார்.
ஜெய், நஸ்ரியாவை தீவிரமாய் நேசிப்பார், அந்த முஸ்லிம் பெண் பாடுங்கின்ற பாட்டுக்கு கூட, ஜெய் பட்டும் படாமல் பதில் சொல்வார்..
"உன் மூச்சு நின்றாலும் - உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது..."
"கண் மூடிப் போனாலும் - உன்னோடு சாய்கின்ற நிழல் தானது...."
அடுத்த வரிகள் இன்னும் அழகு, ஷேவாக், ஷோயப் அக்தரின் outside the offside பந்தை, நின்ற இடத்திலிருந்து, ஹூக் அடிப்பதற்கு சமம்.
"மெல்லிய வெப்பத்தில்
மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் எது?"
அவளோ எதையோ எதிர்ப்பார்த்து பதிலை காத்திருக்க, அதே அக்தரின் யார்க்கரை, ஷேவாக் டொக் வைத்த மாதிரி இருந்தது...
"சட்டென்று தூவிடும்
நட்பென்னும் பூ மழை
சாரலே அது...."
பாடல் எழுதியவரை பாராட்டியே தீர வேண்டும்.
"என்னைப் போல் பெண் ஒன்று,
அச்சாக இன்னொன்று கண்டேனே
நான் இன்று யாரென்று சொல்..
நேசத்தை சொல்ல
வார்த்தை வசப்படுமா...
கடைசி சரணத்தில், பாட்டு முடியும் தருவாயில் கூட,
"வாழ்வே உன்னோடு
என்னோடு இணைந்திட வா...
இனி எல்லாம் நீ தான்
நீயே நான் தான்"
You are the last thought in my mind before I drift off to sleep and the first thought when I wake up each morning....

Guru - Tera Bina

 பிடிச்ச பாடல் -1

இந்த பாடலை ஹிந்தியில் பார்க்கும் போது இருக்கும் நேர்த்தி, தமிழில் பிடிக்காமல் போய்விட்டது. காரணம், நேட்டிவிட்டி. ஹிந்தி முகங்களுக்கு, எப்போதும் தமிழ் லிரிக்கஸ் ஒத்துப் போவதில்லை. தமிழில் கேட்கும் போது, பாட்டு மனதில் ஒட்டவே மாட்டேன்கிறது. அதற்கு, இந்த பாடலே ஒரு பக்கா எக்ஸாம்பிள். தக்காளி தோக்கிலே, பெர்செண்டேஜ் ஆஃப் வெங்காயம் அதிகமாகப் போச்சுன்னா, தக்காளியும் வெங்காயமும் சிதறிண்டு நிக்கும். அதுபோலவே இதுவும்.

அடுத்தது, ஒரிஜினலா ஹிந்தியிலேயே இருப்பதால் அப்படியே கேட்கலாம். மிக அழகான ரொமாண்டிக் பாடல். அதுவும் ஐஸ்வர்யா ராய்க்கு ரிச்சான காஸ்ட்யூம். பொதுவாகவே, ஐஸ்வர்யா, க்ளாசிக்கல் டான்ஸர் என்பதால், ஒரு லாங் ஷாட்லே லேசான நடன அசைவுகளை ஆரம்பித்து, நிறைய ரிதமிக்கான உடலின் சுழற்றலோடு கைகளின் முத்திரைகளில் முடித்து வைப்பார். How Sweet she is !!!

இதுல என்ன அழகுன்னா, அவரின் உயரமான உருவமும், அதற்கேற்ற மெல்லிய உடல்வாகும், நீண்ட கால்களும், சிற்ப வளைவுகளும், நார்த் இண்டிய பெண்ணைப் போன்ற லேசான ஒட்டிய கன்னங்களும் காமெராவின் கண்களுக்கு தப்பவில்லை. நம் மனதை கொள்ளை கொள்ளவே செய்கிறது. அந்த மூன்று நிமிஷ பாடலில் மூவாயிரம் காதல் உணர்வுகளை கொண்டு வந்து விடுவார். அழகோ அழகு.

ஆண் குரலில், வேறு யாராவது பாடியிருக்கலாமோ எனத் தோணுது.
பாடல் ஆரம்பத்திலேயே, ஹிந்துஸ்தானி நோட்ஸ் டச் பண்ணுவார். ARR க்கு ஸ்வரங்கள் சொல்லும் போதும், ஏதோ ஒரு தடுமாற்றம் இங்கே தெரிகிறது. தொண்டையில், ப்ரேக் வருவதை இப்பாடலில் பார்க்கலாம். Breadth போதவில்லை. இதுலே மஹா கோரம் என்னவெனில், ARR வாய்ஸ் - ஹாரிபிள். அதுவும் அந்த ஹிந்தி வார்த்தைகளின் உச்சரிப்பு படு கேவலம். வார்த்தைகள், ரொம்பவே ஹார்ஷா வெளியே வந்து விழுகிறது. வெட்டி வெட்டி பாடுவார். காட்டுறே, காட்டுறே, ஹாஹாஹா.,.
அவருக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. பொதுவாக ARR க்கு ஹை பிட்சில் போகும் போது கொடுமையாக கீறல் விழும், பிசிர் அடிக்கும். பாடலில் சொல்லிக் கொடுக்க தெரியலாம் - ஆனால் பாடும் போது இடிக்கும்.

நுணுக்கமான கமக்கம் (Gamakas) - இதுக்கும், அவருக்கும் ரொம்பவே தூரம். ஆனால், கம்போஸ் பண்ணும் போது, பாடுகிற மற்றவரிடம் அழகாய் கொண்டு வந்துவிடுவார். அவருக்கு யாரு போய் சொல்றது, ஐயா பாடறதை நிறுத்தும். ஹிந்தியில் பேசுவது வேறு, பாடுவது வேறு‌. பாடும் மொழியின் வார்த்தைகளே வேறு என்று. பொதுவாகவே ஹிந்தி லிரிக்ஸில், உருது வார்த்தை களையும், சான்ஸ்கிரிட் கொஞ்சம் தெளிப்பதையும் தவிர்க்கவே முடியாது.

கொஞ்சமாவது மொழியை உள்வாங்கி, நெளிவு சுழிவுகளோடு பாட வேண்டும். இது ஹிந்தி படிக்கிறவர்களுக்கு தான் - மொழியின் அர்த்தம் புரியும். விளங்கும். இசையில், மொழியின் உச்சரிப்பும் மிகவும் அவசியம்.

எல்லா மொழிகளிலுமே இலக்கிய தரமான வார்த்தைகள் இருக்கு. அதனைப் பாடும் போது உச்சரிப்பை தவற விடக்கூடாது, அதனை பெண்ணின் வளைவுகளை போல மிக துல்லியமாகவும், நயமாகவும் பாடவேண்டும்.

தமிழ் ஆளு ஹிந்தி எப்படி பேசுவாங்க நமக்கு தானே தெரியும்.

அது எப்படினா, என்னைப் பற்றி, என் ஆம்படையாளின் தலை சிறந்த ஓபினியன் ஒண்ணு இருக்கு, "இவரால 200 மெகா வாட் ப்ளாண்ட் கூட கட்டி முடிச்சுட்டுவார், ஆனால் 800 ஸ்கொயர் ஃபீட் வீடு கட்ட தடவுவார்", என்பாள். வீட்டில் யாராவது அரைமணி நேரம் பேசிண்டு இருக்கப் படாது, அவளுக்கு இதை சொல்லியே ஆகணும். இல்லைனா அவளுக்கு ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது. அதுபோல ARR ஆஸ்கார் வித்வானா கூட இருக்கலாம், ஆனா பாடினா சகிக்காது. வித்துவான் நல்லா கத்துவான், அவ்வளவே.

முழுமையாக பார்க்கும் போது கலக்கல் ஸாங். காரணம், மிகச் சிறந்த இசைக்கோர்ப்பே. இதில் ரஹ்மான் முந்தி விடுகிறார்.

அதுவே பின்னாடி பாடும் ஹார்மனி கேளூங்களேன் - முர்தஸா கான், காதிர் கான் என்ன மாதிரி பெர்ஃபெக்டா பாடுகிறார்கள். மெலிதான குரலில் ஒரு அற்புதமான குழைவுகள். சின்மயி பற்றி சொல்லவே வேண்டாம். வெரி ஸ்வீட் வாய்ஸ் . அதுவும் 3.06 லிலிருந்து கவனியுங்களேன், லவ்லி, ஐஸ்வர்யா ராயின் அழகைப் போன்றே, இவர் குரலும். அந்த மூன்று லைன் "தேரே பினா சாந்த்..." ...Wow ...

அசத்தல் சின்மயி. என்னோட ஆல் டைம் ஃபேவரிட் ஸிங்கர்.

இதை விட பியூட்டி, பாடலின் கடைசியில் உயரமான அபிஷேக், அசத்தலாய் நடந்து வரும் ஐஸ்வர்யா ராயின் Glass hour hip ஐ இழுத்து அணைப்பது தான்.... 😊😍😍






நினைவலைகளில் அவள்!

இன்னைக்கு ஷார்ட் கேர்ள்ஸ் பத்தி ஒருத்தர் போஸ்ட் பண்ணியிருக்கார். எனக்கு உயரமான பெண்கள் என்றால் அலாதிப் ப்ரியம். அந்தக் கால கேப்ரியாலா சபாடினி, மரியா ஷரபோவா, ப்ரூக் ஷீல்ட்ஸ், ருவாண்டா அங்கே ககாமே, நம்ம ஊரு சுஷ்மிதா சென், இலியானா என இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்..

என்னோட சின்ன வயசுல, +2 படிக்கும் வயதுன்னு நினைக்கின்றேன், எல்லோருக்கும் இருக்கும் அதே டீனேஜ் பருவம். உடம்பில் ஏற்படும் தாறுமாறான ஹார்மோன்களின் உதவியால், பல தடுமாற்றங்கள். Adolescence ஹிம்சைகள். பல ஆயிரம் கனவுகளோடு சஞ்சரிக்கும் வயது. எல்லையற்ற ஆனந்த வாழ்வு. இனம் புரியாத சஞ்சலமான வாழ்க்கை. இதையெல்லாம் தவிர்க்க முடியாத இளமைப் பருவம்.

அன்றைய காலகட்டத்தில், இந்திய கலாச்சார முறைகளில் நிறைய கட்டுப்பாடுகளினாலும், அதனைப் பற்றி சரியான அணுகுமுறை - புரிதல் இல்லாததாலும் பல குழந்தைகள் விடலைப் பையன்களாக மாறிக் கொண்டிருந்தார்கள்.



எங்க வீட்டில், ஒவ்வொரு வாரமும் கல்கி, ஆ. வி, குமுதம் வரும். அதில் குறிப்பாக குமுதம் இதழ்களில் வரும் தொடர்கதைகளுக்கு ஜெயராஜின் படமே இருக்கும். அவர் வரைந்த படங்களையே, கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் வயது. அது மட்டுமல்ல, கதையில் வரும் ஹீரோயினை கூட லவ் பண்ணுவோம்‌. ரசிப்போம். ஏனெனில், ஜெயராஜ், பெண்களை மிக அழகாய் வரைவார்‌. அதில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் பனியனில் எழுதியிருக்கும் வாசகங்கள் மிகவும் பிரசித்தம். அந்த வரிகள் கூட படிக்கும் படி தெள்ள தெளிவாக இருக்கும். ஆனால், எல்லாமே ஏடாகூடமாக இருக்கும். சிலதுகள் இன்னும் நினைவில், Wait until Dark, TNDCC, Catch me if you can, Too big to hold, Etc etc.
ரொம்பவே ஆர்வமாக இதனைப் பற்றி ஃப்ரெண்ட்ஸ் மத்தியில், சிலாகித்து பேசிக் கொண்டிருப்போம். ஒருத்தன் என்ன செய்தான், எல்லா வாரங்களில் வெளியாகிய பனியன் வரிகளை எழுதிக் கொண்டு வந்து விட்டான். அதனை சர்குலேட் வேறு பண்ணிருந்தார்கள். நானும் ஒரு காப்பி எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்.
நிற்க.
எங்க ஏரியாவில், என்னை விட கொஞ்சம் நாலு, ஐந்து வயது வித்தியாசத்தில் காலேஜ் போகும் பெண் ஒருவர் இருந்தார்கள். பெயர் சரியாகத் தெரியவில்லை. கற்பனையாக பூர்ணிமா என அழைப்போம்.
பூர்ணிமா ரொம்பவே உயரம், வெரி ப்ரெட்டி, காலேஜ் போகும் போது, எங்க ஸ்ட்ரீட்டை தாண்டித் தான் போக வேண்டும். அந்த உயரமான அழகு, என்னை நிலை குலைய வைக்கும். அசந்து போய் நின்னுடுவேன். இவ்வளவு உயரமா!!!
பொதுவாக பெண்கள், நம்மை ஆர்வமாக பார்க்க வைத்து விடுவார்கள். ஏதோ ஒன்று, வசீகரிக்கும் அழகு அவர்களிடம் இருக்கும். அந்த இளம் வயதில், பெண்கள் நமக்கு ஆச்சர்யமானவர்கள். ஒரு ஈர்ப்பு அவ்வளவே. சற்றே பின்னோக்கி பார்க்கையில், எவ்வளவு பெண்கள் என்னுள், ஆழமான நினைவடுக்குகளில் இன்றும் தங்கியிருக்கிறார்கள்‌.
ஒரு தீபாவளி ஈவ்னிங், என்னோட சிஸ்டர், "ராம், பெருமாள் கோயில் போகிறேன் வாயேன்" என்றாள். சேஷாத்ரி கூட இன்று இல்லை. ஆர்வமாக வெடிகளை கொளுத்தும் நான், இன்றைய தீபாவளி வெடிச்சத்தம் பிடிக்கவேயில்லை. போரடிக்கவே, தங்கையோடு கோயில் போனேன். எங்கும் தீபங்கள்.
வழக்கமான கோயில் தான், இன்று அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் அழகிய பெண்களின் சிரிப்பலைகள். சற்று கூச்சம் வேறு ஒட்டிக் கொண்டது.
வெளிப் பிரகாரத்தில், வலது புற சுற்றில், அழகான பெண்களை தவிர்த்து விட்டு, ஏனோ அன்று பவளமல்லி செடியைப் பார்க்க நேர்ந்தது.
சாயங்கால இருட்டு, வெள்ளை இதழ்களும், சிவப்பும் மஞ்சளும் ஃப்யூசன் ஆன அடிப்பாகம் கொண்ட பவளமல்லி மலர்கள் கொட்டியிருக்க, ரம்மியமாக இருந்தன. இதனை வஸந்த காலத்தில் பார்க்கும் போது, இன்னும் அழகாய் இருக்கும். அதுவும் மழை நின்ற பிறகு, கொட்டிய பவளமல்லியைப் பார்க்க வேண்டுமே அழகோ அழகு. வாசனையும் மயக்கம் வரவழைக்கும். இப்போதும் உணருகிறேன்.
ஏனிந்த மாற்றம் எனக்குள் புரியவில்லை. அவளின் நினைவாக இருக்குமோ, சரியாகத் தெரியவில்லை. சிறிய வயதிலிருந்தே இந்த கோயிலுக்கு வருகிறேன். தனுர் மாதம் வந்துவிட்டால், திருப்பாவை சேவித்தல்‌. அதை விட பட்டர் என்ன தருவாரோ மிளகு பொங்கலா, ததியோன்னமா, புளியோதரையா மனம் அல்லாடும். ஆனால், இன்றோ வஸந்த காலத்தை பற்றி அல்லவா மனம் நினைக்கிறது. நிறைகிறது. எவ்வளவு ரசாயன மாற்றங்கள் எனக்குள். பெண் என்பவள் எவ்வளவு ஆழமாக நமக்குள் வேரூன்றி போகின்றாள். அசாதாரண உணர்வு!!!
வலது மண்டபத்தில் தாயாரை சேவித்து விட்டு, அடுத்து ஆண்டாள் மண்டபம் நுழைகையில், அந்த பூர்ணிமா என்னை க்ராஸ் செய்து போனார்கள். பாட்டல் க்ரீன் ஆஃப் சாரி, எல்லாமே கிட்டத்தட்ட அதே நிறத்தில் அணிந்த உடைகள். அது பட்டுப் பாவாடையா, என்ன வென்று சரியாக நினைவில்லை. அவர்கள் நடக்கையில், பட்டுபாவாடை சற்றே குவிந்து, அழகிய குடைப்போல், பல பிளிட்டிஸ்சின் அசைவுகளில் மிக அழகாய் இருந்தாள்.
என் தங்கையும், அவள் சென்றதை நான் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தாள். " நல்ல உயரம்டா.. அழகா இருக்கா. இல்லை", லேசாக சிரித்தேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் வீட்டில் தான் ராமன் என்றா சொல்ல முடியும்...
ஒவ்வொரு நாளும் பூர்ணிமா போவதை எப்படியாச்சும் பார்த்து விடுவேன். என்றாவது ஒரு நாள் அவளிடம் பேசி விடுவது என நினைப்பேன்.
அதுவும், அவளிடம் போய் " பூர்ணிமா, உன் அசாத்தியமான உயரம், என்னை அதிசயப்பட வைக்குது" ன்னு சொல்லலாமா என நினைத்தேன். இது சரிவராது, சினிமா டைலாக் மாதிரி இருக்கு. வேறு ஒண்ணு யோசிப்போம் என விட்டு விட்டேன்.
அதற்குள் எனக்கு ஏகப்பட்ட ப்ரஷர், மாத்ஸ்க்கு ஒரு ட்யூசன், பிஸிக்ஸ்க்கு ஒண்ணு, கெமிஸ்ட்ரிக்கு ஒண்ணு. நிமிர முடியவில்லை. பூர்ணிமா மட்டும் என்றென்றும் நினைவில். அவளின் உயரம், மிக நீண்ட கால்கள் அதனை நினைக்கும் போது மனம் படபடக்கும். கோயில் புறாக்கள் விடியலில் சடசடவென பறந்தோடும், அது போல இருக்கும் அவளை நினைக்கையில்.
எஞ்சினியரிங் என்ட்ரஸ், அந்த என்ட்ரஸ் இந்த என்ட்ரஸ் என சாக அடிக்கவே, அவளின் நினைவுகள் மட்டுமே தங்கிவிட்டது. காலேஜ்ஜிற்கு என்னையும் துரத்தி விடவே, அவளை பார்க்க முடியாமலே போய் விட்டது.
பல வருஷம் அவளை ஃபேஸ்புக்கில் தேடிக் கொண்டிருந்தேன். நான்கு வருஷம் முன், அவளின் தம்பி மூலம் கண்டுபிடித்தேன். பிரயோஜனம் இல்லை, அவள் ஃபேஸ்புக்கில் இல்லவே இல்லையாம்.
இன்றும் உயரமான பெண்கள் என்னைக் கடக்கும் போது, சற்று நிமிர்ந்து பார்ப்பேன். ஆஃப்ரிகாவில் கூட ருவாண்டன் பெண்கள் மிக உயரம். அழகோ அழகு.
அப்படித்தான் ஒரு முறை ருவாண்டன் பெண்ணை ஆபிஸ் விஷயமாக சந்திக்க நேர்ந்தது...
- இன்னும் வரலாம்

 "ரக்கா" - பழமைவாதிகளின் புலம்

பொதுவாகவே நிறைய war movies பார்க்கும் பழக்கம் உண்டு. ஒரு விதமான obsession என்று கூட சொல்லலாம். எக்கச்சக்கமான war movies கலெக்சன்ஸ் வைத்திருக்கேன். திருப்பி திருப்பி பார்த்துண்டு இருப்பேன். இப்போது வெறுமென உட்கார்ந்து கொண்டிருப்பதால் ஐபாட் ப்ரோவில் நிறைய படங்கள் பார்க்கும் படி ஆகிப் போகிறது. அதை தேடி தேடி ஐபாடில் பார்க்கும் வழக்கம் இப்போதும் தொற்றிக் கொண்டது. அதுவும் வித்தியாசமான தலைப்புகளில் வரும் வெப் சீரிஸ் சரியான தீனி, என்னைப் போல் மூவி ப்ரியர்களுக்கு. கலக்கலோ கலக்கல்.
அப்படி பார்த்த சீரிஸ் தான் கலிஃபா (Kalifat- Caliphate) இதுவரை அரைகுறையாக சிரியாவை பற்றி தெரிந்து வைத்திருக்கும் போது, சிரியாவை சுற்றிலும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் போது - இந்த மாதிரி படங்கள் நிறையவே தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இஸ்லாமிக் ஸ்டேட் பற்றிய நிகழ்வுகளை, படிக்கையில் பார்க்கையில் இயல்பாகவே ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.


கதை நடப்பது என்னவோ ஸ்வீடன், ஜோர்டன் மற்றும் ரக்கா (Islamic state Raqqa) சார்ந்த இடங்களே. இதனை ஒற்றியே, அதைப் பற்றிய நிறைய குறிப்புகளோடு கதையும் நகர்கிறது. ரக்கா, சிரியாவில் உள்ள சிறிய நகரம். அது, சிரியா சிவில் வார் நடந்த போது, தனிமைப்படுத்தப்பட்ட இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் தலைநகரமும் கூட. இந்த caliphate வெப் சீரிஸ், கற்பனையோடு ஒரு சில நிஜங்களையும் சேர்த்தே அழகாக சொல்கிறது.

மேலோட்டமாக பார்த்தால், ஹாலிவுட் படங்களில் War genre இல் வழக்கமாய் காணப்படும் திவீரவாதம் தான் கதைக்களம் இதற்கும், இது ஒரு ஸ்வீடிஷ் மூவி. இங்கே இவர்கள் எடுத்துக் கொண்ட களம், ஸ்வீடனில் நடக்கப்போகும் டெரரிஸ்ட் அட்டாக்ஸ். இதனோடு ரக்கா தீவிரவாதிகள் பங்கு என்ன, எப்படி தொடர்பு இருக்கிறது என்பதை விளக்கும் எபிஸோட்ஸ். அவர்கள் எப்படி ஜிகாதிகளை உருவாக்குகிறார்கள் - அதிலும் இளம் பெண்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள், சாதாரண மக்களை எப்படி ப்ரைன் வாஷ் செய்கிறார்கள் என்பதும் காட்டப்படுகிறது.

அவர்களின் நெட்வொர்க் எப்படியெல்லாம் உலகம் முழுக்க விரிகிறது என்றெல்லாம் பார்க்க கொடூரமாக இருக்கிறது. அதுவும் அவர்களின் குறிக்கோள், எதற்காக இதனை செய்கிறார்கள் என்று சொல்லும் போது படு பயங்கரமாகவே இருக்கு. இத்தகைய செயல்களை செய்ய, எந்த விலையும் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதை பார்க்கும் போது, மனம் அச்சம் கொள்ளவே செய்கிறது. சுற்றி இருக்கும் innocent மக்களை, பலிக்கடாவாக ஆக்கியும் அவர்களை அழித்தும் என்ன பலன் அடையப் போகிறார்கள் என்ற எண்ணமும் கூடவே வருகிறது.

வசனங்கள் மிகவும் ஆழமானவை, பல அர்த்தங்களை சொல்ல விழைகிறது. ரொம்பவே ஷார்ப். அதில் ஒன்று, "1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போதித்த வார்த்தைகள் இது, அந்த காலகட்டத்திற்கு அது பொருந்தி இருக்கலாம், இன்றைய வாழ்க்கை சூழலுக்கு அது மிகவும் பழமையானது, அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவும் கூடாது", என்று வருகிறது.

பயங்கரவாதத்தின் ஆணிவேரை பார்க்கையில் - தனி மனிதர்களின் பேராசைகள், மூடத்தனத்தில் ஊறிப்போன பழமை வாதங்கள், மற்றும் எதோச்சதிகாரம் இவைகளை முன்னிறுத்தியே கதை நடக்கின்றன. இதனிடையே, மனித நேயமும் இப்போதெல்லாம் குறைந்தே போய்விட்டது என நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

கதையை நான் சொல்லப்போவதில்லை. ஒரு சில வரிகள் மட்டுமே சொல்கிறேன். ராக்காவில் நடக்கும் பயங்கரவாதம், அதனை பிடிக்காமல் - எதிர்க்க முடியாமல் வாழும் கணவனும் மனைவியும், ஸ்வீடெனில் வசிக்கும் இரு இளம் பெண்களின் பழமைவாதம், ஜிகாத் ஆக மாறும் சகோதர்கள் - இவர்களை ஒருங்கிணைக்கும் அதி தீவிர முஸ்லீம் கோட்பாடு கொண்ட ஒரு இளைஞன், கூடவே ஸ்வீடன் போலீஸ் டீம் - இவர்கள்தான் கதை நாயகர்கள். இவர்களின் உணர்ச்சிப் போராட்டங்களே, செயல்களே கதை அமைப்பு.
இந்த எபிஸோட் பார்த்தும் பய உணர்வு மேலோங்கிப் போகிறது. பயங்கரம் எந்த ரூபத்தில் எப்படி வருமோ என அச்சம் வர ஆரம்பிக்கிறது. இந்தப் படம், நமக்குள்ளே பல ஆண்டுகளாக இருக்கும் விடை தெரியாமல் இருக்கும் பல கேள்விகளுக்கு, அச்சத்துடன் கூடிய பல பதில்களை, ஓரளவு புரிய வைக்கின்றன. இதுவே இந்த டைரக்டருக்கு வெற்றி.

Wednesday, April 28, 2021

ஏதோ நினைவுகள்!!!

 

அப்போதைய மெட்ராஸ், இன்றைய சென்னையில் என் மாமாவின் வீடு இருந்தது. அவரை மெட்ராஸ் மாமா என்றே தான் சொல்லுவோம். அவர்கள் மூன்று தலைமுறைகளாக மெட்ராஸ்சிலேயே இருந்ததால், மாமாவின் நிக் நேம் அப்படியே ஒட்டிக் கொண்டது.

பொதுவாக சர் நேம் கூட, சில தலைமுறைகள் முன்பு, பெரியவர்கள் வாழ்ந்த பூர்விக கிராமத்தின் பெயரை ஒட்டியே இருக்கும். இதுவே, வரும் தலைமுறைகளுக்கு சர் நேம் ஆக அமைந்து விடுகிறது. கேரளாவில், மோஸ்ட்லி, வீடுகளுக்கும் ஒரு நாமகரணம் சூட்டுவார்கள் - இதுவே பின்னர் காலங்களில் குடும்ப சர் நேம் ஆக மாறுவது உண்டு. ஆந்திராவில் கூட அப்படியே.
மெட்ராஸ்சில், என்னுடைய மாமாவின் தாத்தாவிற்கு நிறைய இடங்கள் இருந்ததாய் சொல்வார்கள். இரண்டாவது தலைமுறையில் ரெண்டு மகன்கள் அவருக்கு, பாகம் பிரிக்கும் போது, அதில் ஒருவருக்கு திருவல்லிக்கேணி வீடும், இன்னொருவருக்கு வீடு - சூளைமேடு பக்கம் இருந்ததாக சொல்வார்கள். நிலங்கள் கூட திருவிடந்தை தாண்டி எங்கேயோ இருந்ததாக ஞாபகம். ஆனால், பின்னர் வரும் சந்ததிகள், ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்ப தொகைக்கு விற்று விட்டார்கள், ஆனால் அதுவோ இன்று, கோடிக்கணக்கில் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது.

ஸோ, நான் குறிப்பட வரும் மெட்ராஸ் மாமா, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர், தி.கேணியலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என சொன்னதாக, மங்கலான நினைவு. அதையும் விற்று, மௌண்ட் ரோட் பக்கம் வந்து விட்டார்கள்.
நாங்களும் அடிக்கடி மெட்ராஸ் மாமா வீட்டுக்கு போவோம். " டேய் ராம் கண்ணா, இங்கே வா ", என்று தான் சொல்வார். ஒவ்வொரு ஜனவரி ஒண்ணாம் தேதி birthday greetings card மறக்காமல் அனுப்பி விடுவார். இப்போது, அந்த உறவு முறைகள் பார்ப்பது அபூர்வம். அன்பான உறவுகள்.

இப்போதெல்லாம் உறவினர் வீட்டிற்கு யோசித்தே போவதாக இருக்கும். அப்படியே போனாலும், ஒரு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை. ஒட்டியிருந்த உறவுகள், அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டையாக சிதறி விட்டன. அத்தகைய உணர்வுகள் மட்டும் சில நினைவுகளில் நம்மை மூழ்கடித்து விடும். நினைக்கையில், நெஞ்சில் ஏதோ பாரமாய் பாறங்கற்களாக கனக்கும்.

மெட்ராஸ் மாமா, அந்த காலத்தை அதனை ட்ராம்வே காலம் என பிரித்து வைத்திருந்தார். மெட்ராஸ் மாமாவின் வீடு, வெலிங்டன் தியேட்டர் அருகிலேயே இருந்தது. தியேட்டர், பின்னர் காலங்களில், வெலிங்டன் ப்ளாசாவாக மாறியது. அந்த தியேட்டரின் பின்னாடியே ஒரு ரோட் போகும், பேட்டர்சன் ரோடா (?) - இப்போது பெயர் மாறியிருக்கலாம். அவரோட வீடு அங்கே தான் இருந்தது, ஏதோ ஒரு தெரு - முஸ்லிம் ஏரியா மாதிரி இருந்தது என நினைக்கிறேன்.
மெட்ராஸ் மாமா வேலைக்கு போனது பிரிட்டிஷ் பீரியட் டில், ஏர் ஃபோர்ஸ்சில் சேரும் போது, Warrant Officer என்ற ரேங்க்கில் சர்வீஸ் செய்திருக்கார். வார் ஃப்ளைட்ஸ் ரெஜிமெண்டில் இருக்கும் போது, ரஷ்யாவில் கொஞ்ச மாதங்கள் ட்ரெயினிங். இதுவே கேள்விப் பட்டது தான். என்னோட பெயரைக் கூட ரஷ்யன் லாங்க்வேஜில் எழுதிக் காண்பிப்பார். அந்த பேப்பரை வீட்டில் தேடினால், கிடைத்து விடும்.



சம்மர் என்றாலே ஒரு ஜாலி. மியூசியம், வண்டலூர் ஜூ - முதலில் சிட்டிக்குள்ளேயே இருந்தது. பழைய ஸ்பென்சர் - பிரிட்டிஷ் கால பில்டிங்ஸ், ஹிக்கின்பாதம்ஸ் அப்படியே பொழுது போகும். மவுண்ட் ரோட் வீட்டிலிருந்து, பீச் கூட அவ்வளவு தொலைவு இல்லை. அதுவும் ஏப்ரல் - மே மாதம் விடுமுறைகளில் மெட்ராஸ் மாமா வீடே கதி. பீச் இல்லைனா, தி. கேணி பெருமாள் கோயில், வடபழனி கோயில், மயிலை என ஒரு ரவுண்ட் வருவோம். எனக்கு தெரிந்து ரெட் கலர் பல்லவன்கள் ஓடிய காலம். அதிலேயே சுற்றி வருவோம். பஸ் நெம்பர் ஞாபகம் வைத்துக் கொள்வது அலாதியானது. எனக்கு ஞாபகத்தில் இருந்தவை 15B, 27B, 18C, 23C - இன்னும் இதே நெம்பரில் பஸ் ரூட் ஓடிக்கொண்டிருப்பது ஆச்சர்யம்.


வேறென்ன பொழுது போக்கு. வீடும் மவுண்ட் ரோட் பக்கத்தில் இருந்ததால், அடிக்கடி சினிமா அழைத்து போவதுண்டு. அப்போது, மவுண்ட் ரோட் முழுக்கவே தியேட்டர்ஸ் இருந்தது. காஸினோ, கெயிட்டி, சாந்தி, தேவி காம்ப்ளக்ஸ், அண்ணா - அப்படியே கொஞ்சம் வந்தா வெலிங்டன், அலங்கார், சத்யம் காம்ப்ளக்ஸ், லியோ கொஞ்சம் தாண்டின சபையர் காம்ப்ளக்ஸ்.




ஒரு சில படங்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. அப்போதே பென்ஹர், கன்ஸ் ஆஃப் நவ்ரோன், டென் காமெண்ட்மெண்ட்ஸ், மெகானாஸ் கோல்ட், இப்படி நிறையவே. காமெடி படங்களும் அழைத்து போவார்கள், அது Laurel & Hardy, Bed Spencer & Terrance Hill மூவிஸாக இருக்கும்.






என்னோட கஸின்ஸ் நிறையவே கதை சொல்வார்கள். அதுவும் காமிக்ஸ் சொல்லும் போது, ரிச்சி ரிச், ரெக்கி, லிட்டில் டாட்ஸ், லோட்டோ, Phantom, Diana Palmer இவையெல்லாம் கண் முன்னே கொண்டு வந்து விடுவார்கள்.

மெட்ராஸ் மாமாவும், குறிப்பிட்ட காலம் மிலிட்டரியில் இருந்து விட்டு, இந்தியா முழுக்க சுற்றி விட்டு, சென்னையிலே கடைசியாக இருந்து விட்டார். அவரும் பின்னர் காலங்களில், ஷாந்தி காலனியில் இடம் வாங்கி எங்கேயோ இருந்தார். ஆரம்பத்தில், ஒரு லேண்ட் மார்க், அண்ணா டவர்ஸ், நிறைய சினிமாவில் கூட இது தலையைக் காட்டியிருக்கும். பின்னர் காலங்களில் இன்னொரு லேண்ட் மார்க் க்ராண்ட் தியேட்டர் வந்தது.


கடைசியாக, ஏதோ ஒரு கம்பெனியில் அம்பத்தூர் எஸ்டேடில் வேலைப்பார்த்து வந்தார். அது மட்டும் நினைவில் இருக்கு. ஏதோ ஒரு சூழ்நிலை வந்தப் போது, ஷாந்தி காலனியில் இருந்த இடத்தையும் விற்று விட்டு, ஆவடிக்கு வந்து விட்டார்.

மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரம் ரொம்பவே அபாயகரமானது. எப்போதும் மேலேயே இருக்கும் என சொல்லி விட முடியாது. கொஞ்சம் இறங்கி, மீண்டும் ஏறும் போது, நாம் அப்போது, வாழ்க்கையின் விளிம்பில் இருப்போம்.




எப்படி இருந்தாலும், சில நினைவுகள் - அது ஒரு அழகிய கனாக் காலத்தையும் கொண்டு வரவே செய்யும்.

Tuesday, April 27, 2021

தொலைந்து போன உறவு!


 சுஜாதா காதலைப் பற்றி சொல்கையில், இதற்கு விஞ்ஞானம் பதில் சொல்கிறது என்பார், ”இயற்கை நம்மை ஒருவகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கிறதாம். உங்கள் ஒவ்வொருவர் மனதின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம். அதாவது, தனிப்பட்ட முகம், சுருள் முடி, அழுத்தமான உதடு, தனிப்பட்ட இத்யாதிகள். இந்த உருவம் உங்கள் ஆரம்ப இளமைக் காலத்தில் மனதில் உருவாகிறது. அந்த முகத்தைச் சந்திக்கும்போது ஒரு கை சொடக்கில் காதல்".


சுஜாதா சொன்ன இத்யாதிகள் - அப்படிப்பட்ட உருவம், நம் இளம் மனதில் நிச்சயம் கனவுப் பக்கங்களில் உலா வரவே செய்யும். கற்பனையாய் மனதில் பதிந்த உருவத்தை, அதியசமாய் அபூர்வமாய் சந்திப்பதும் நடந்து விடுவதும் உண்டு. ஆனால், அந்த இனிமையான தொடர்பு எப்போதும் தொடருமா என தெரிவதில்லை.
விதிவசத்தாலோ, இல்லை ஏதோ வகையிலோ அவ்வாறு இழந்து விட்ட உணர்வுகளை, பின்னர் காலங்களில் அசைப் போடத்தான் முடியும். இதனை கேள்வியுரும் நண்பர்கள், இதுவும் கடந்து போகும் என்பார்கள். ஆனால் அந்த மெலிதான நினைவுகள், அழகான தருணங்கள் மீண்டும் மீண்டும் நமது நினைவுப்பாறைகளில் வந்து வந்து - முட்டி மோதி, அலையலையாய் ஓயாமல் மௌனமாக அடித்துக்கொண்டுத் தான் இருக்கும்.
அடி மனதில் ஆழமாக புதைந்து விட்ட அத்தகைய மௌனங்கள், எப்போதும் கலையப் போவதில்லை...